விஷம் வைத்து 20 நாய், பூனை கொலை - 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே விஷம் வைத்து 20 க்கும் மேற்பட்ட நாய் பூனைகளை கொன்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விஷம் வைத்து 20 நாய், பூனை கொலை - 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
காடையாம்பட்டி பகுதியில் ஒரே மாதத்தில் 20 நாய்கள் இறந்தன. இந்த நிலையில்  இன்று அதே பகுதியில் உள்ள லட்சுமி என்பவரின் நாய் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு வந்தவுடன் சுருண்டு விழுந்து இறந்தது. இதே போன்று கலா என்பவரின் பூனையும் இறந்து கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கிருந்த வேங்கை மற்றும் சுப்பிரமணி என்பவர்கள் நாய் பூனைக்கு விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்