ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்
x
நெல்லை மாவட்டம் பணகுடி மலையடிவாரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை, சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்புரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரது தோட்டத்தில், புகுந்த சிறுத்தை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து கொன்றது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் தோட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்