விஷால் மீது காவல் ஆணையரிடம் புகார்

தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள நிதியை நடிகர் விஷால் கையாண்டது குறித்து சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி. சேகர் புகார் அளித்துள்ளார்.
x
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள நிதியை  நடிகர் விஷால் கையாண்டது குறித்து சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி. சேகர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த 8 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்தது குறித்து விஷாலே தங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், இதனை ஆதாரமாக வைத்து அவர் மீது புகார் அளித்துள்ளதாகவும் எஸ்.வி.சேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்