இன்று முதல் இலங்கையில் 'தினத்தந்தி'

இந்தியாவின் நம்பர் ஒன் தமிழ் நாளிதழான 'தினத்தந்தி' இன்று முதல் இலங்கையில் வெளிவருகிறது.
x
இலங்கையின் பிரபல தமிழ் நாளிதழ் வீரகேசரி. 1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாளிதழ் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. இலங்கையின், பாரம்பரியமிக்க இந்த நாளிதழுடன் இணைந்து இந்தியாவின் நம்பர் ஒன் தமிழ் நாளிதழான 'தினத்தந்தி' இன்று முதல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் 'தினத்தந்தி' நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியன் ஆதித்தன் முன்னிலையில், கடந்த 9ஆம் தேதி கையெழுத்தானது. ஏற்கனவே, துபாய், மும்பை, பெங்களூரு உட்பட 17 இடங்களில் இருந்து வெளியாகும் தினத்தந்திக்கு, தற்போதைய கொழும்பு பதிப்பு, 18 ஆவது பதிப்பாகும்.

Next Story

மேலும் செய்திகள்