மருத்துவர்கள் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி

விசாரணை பாதிக்கும், தேவையற்ற செலவு என கருத்து
மருத்துவர்கள் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி
x
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விசாரணைக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு ஏற்படுத்தக்கோரிய அப்பல்லோ மருத்துவமனையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும், அதனால் மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும் என அப்பல்லோ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த ஆறுமுகசாமி, இது போன்ற மருத்துவ குழு அமைத்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும், தேவையற்ற செலவும் ஏற்படும் எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்