புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் விடுதலை

ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என தகவல்
புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் விடுதலை
x
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரி இந்திய அரசு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரையும் விடுதலை செய்தது. அவர்கள் 6 பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்