வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கிகள் - தப்பியோடிய நபர் கைது

போலீசார் சோதனை - 2 துப்பாக்கி பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கிகள் - தப்பியோடிய நபர் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் வடசேரி அருகே  உள்ள கீழ கலுங்கடியில் அருண் சாஜு என்பவரது வீட்டில் கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அருண்சாஜூவையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அருண்சாஜூ சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்