பண்ணாரி கோயில் உண்டியல் வசூல் ரூ.46.16 லட்சம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில், இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.
பண்ணாரி கோயில் உண்டியல் வசூல் ரூ.46.16 லட்சம்
x
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில், இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட 20 உண்டியல்களில் 46 லட்சத்து 16 ஆயிரத்து 987 ரூபாய் ரொக்கமும், 236 கிராம் தங்கம், 715 கிராம் வெள்ளியும்  இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர். காணிக்கை எண்ணும் பணியில், கோயில் பணியாளர்களுடன், வங்கி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரும் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்