ரசாயன உரங்களை கைவிடுங்கள் - நல்லகண்ணு

இயற்கை விவசாயம் செய்வோரை பாராட்டி விருது
ரசாயன உரங்களை கைவிடுங்கள் - நல்லகண்ணு
x
இயற்கை விவசாயம் செய்துவரும் இளைஞர்கள் மற்றும் மூத்த விவசாயிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், தென்னிந்திய இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, ஐ.டி. துறை இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவது வரவேற்கத்தக்கது என்றார். செயற்கை உர பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்