இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு - ஜன.28-க்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு

இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி நடத்த தடை கோரிய மனுவுக்கு, வரும், 28ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு - ஜன.28-க்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு
x
இது தொடர்பாக தயாரிப்பாளர்  சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ல் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றபோது, 7 கோடி ரூபாயாக இருந்த சங்கத் இருப்புத் தொகை, தற்போது 50 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். சங்க உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த தில் உள்ளன. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து, வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்து.

Next Story

மேலும் செய்திகள்