இரும்பு பொருட்கள் விற்பனை கடையில் கொள்ளை - ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்
இரும்பு பொருட்கள் விற்பனை கடையில் கொள்ளை - ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
x
சென்னை மாங்காட்டில், இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். பட்டூரை சேர்ந்த கன்னிலால் என்பவருக்கு சொந்தமான கடையில் நிகழ்ந்த கொள்ளை குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கார் மற்றும் வேனில்  வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து  அதில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்