தூத்துக்குடி ஆட்சியர் மீது ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் அதிருப்தி

"உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு"
தூத்துக்குடி ஆட்சியர் மீது ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் அதிருப்தி
x
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை சந்திக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவர்கள், ஆட்சியர் இல்லாததால் திரும்பி சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், வரும் 24ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்ததாகவும் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை எனவும் கூறினர். இதனால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்