40 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்

துரிதமாக செயல்பட்டதால் மூதாட்டி பிழைத்தார்
40 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்
x
சென்னை குரோம்பேட்டை சாந்திநகரில் 42 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 75 வயது மூதாட்டி, தீயணைப்பு துறையினரின் துரிதமான செயல்பாட்டால் உயிர்பிழைத்தார். சரோஜா என்ற மூதாட்டி கிணற்றில் விழுந்து விட்டதாக  தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பத்தே நிமிடங்களில், கயிறு கட்டி மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருதுத்துவமனையில் அனுமதித்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்