கணவரை சேர்த்து வைக்க கோரி சிங்கப்பூர் பெண் தர்ணா

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி சிங்கப்பூரை சேர்ந்த பெண் திருவாரூர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கணவரை சேர்த்து வைக்க கோரி சிங்கப்பூர் பெண் தர்ணா
x
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த  ராஜ்குமார் என்பவர் சிங்கப்பூரில் ஓட்டுநராக  பணிபுரிந்து வந்தார். அப்போது துர்கா தேவி என்ற பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். 

இதையறிந்து சிங்கப்பூரில் இருந்து வந்த துர்காதேவி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். பின்னர் பெருகவாழ்ந்தானில் இன்று நடைபெறவிருந்த ராஜ்குமாரின் இரண்டாவது திருமணத்தை தடுத்த நிறுத்த கோரி துர்காதேவி போலீசாருடன் மண்டபத்திற்கு சென்றார். ஆனால் 3 நாட்களுக்கு முன்பே ராஜ்குமாருக்கு திருக்குவளையில் திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்