சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது
x
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த 3 பேர் குளிர்சாதன பெட்டியின் மோட்டார் மற்றும் சூட்கேஸ் சக்கரம் ஆகியவற்றில் 900 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்துள்ளனர். அதேபோல் துபாயில் இருந்து வந்த 2 பேர் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 400 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு  42 லட்சம் ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்