இலங்கை கடற்படை துரத்தியதில் மீனவர் பலி : தமிழக அரசு சார்பில் நிதி உதவி

இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இலங்கை கடற்படை துரத்தியதில் மீனவர் பலி : தமிழக அரசு சார்பில் நிதி உதவி
x
இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 12ம் தேதி ராமநாதபுரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை துரத்தியதில் படகு கவிழ்ந்து முனியசாமி என்ற மீனவர் பலியானார். இலங்கையில் கரை ஒதுங்கிய அவரது உடல், நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், நேரில் சென்று ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கியதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்