800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...
800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...
x
வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை அழிப்பதற்காக ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்புத் துறையிடம்  ஒப்படைத்தனர். கடந்த 11ஆம் தேதி, சென்னை எழும்பூர்  ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமாக மூட்டைகளை சோதனை செய்தபோது, அது  தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா  என தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இவற்றை அழிப்பதற்காக இன்று உணவு துறை அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைத்தனர்.  இந்த குட்கா பொருட்கள் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் புதைத்து அழிக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்