வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த மர்மநபர்கள் : சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

ஆவடி அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர்.
வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த மர்மநபர்கள் : சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
x
ஆவடி அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீ மளமளவென பரவியதில் 4 இருசக்கர வாகனங்கள், 3 மிதிவண்டிகள் தீயில் கருகின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்