மக்களை கவர்ந்த 5 ரூபாய் மருத்துவருக்கு பாராட்டு விழா

தாம்பரத்தில், குறைந்த கட்டணத்தில் சேவை செய்து மக்களை கவர்ந்த 5 ரூபாய் மருத்துவருக்கு மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.
மக்களை கவர்ந்த 5 ரூபாய் மருத்துவருக்கு பாராட்டு விழா
x
தாம்பரத்தில் நடந்த விழாவில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் சேஷகிரியின் மருத்துவ சேவையை பாராட்டி, அவருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினர். தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சேஷகிரி, கடந்த 40 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். ஏழைகள் செல்ல முடியாத அளவுக்கு தனியார் மருத்துவமனைகளில்  கட்டணம் உயர்ந்து விட்ட தற்போதைய நிலையில், குறைந்த கட்டணத்தில் சேவை செய்யும் மருத்துவர் சேஷகிரியை தெய்வத்திற்கு நிகராக மக்கள் பார்க்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்