நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்

சேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர்.
நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்
x
சேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நிகழ்வை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நரியை மீட்டனர். நரியை பிடித்து வைத்திருந்த 10 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்