பிளாஸ்டிக் தடை எதிரொலி : வாழை இலைக்கு மீண்டும் கூடியது மவுசு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, வாழை இலைக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.
பிளாஸ்டிக் தடை எதிரொலி : வாழை இலைக்கு மீண்டும் கூடியது மவுசு
x
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, வாழை இலைக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அறுவடை செய்யப்பட்டு வரும் வாழை இலைகள் கட்டு கட்டுகளாக காவல்கிணறு சந்தைக்கு விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. வாழை இலைகள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், தேவைகள் அதிகமாக இருப்பதால் விலை ஏற்றம் ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கேரளா போன்ற வெளி மாநில மொத்த வியாபாரிகளும், இங்கு கொள்முதல் செய்து வருவதும் விலையேற்றத்திற்கு மற்றொரு காரணம் என்று கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்