காதலியுடன் வனப்பகுதிக்கு சென்ற காதலனை குத்திக் கொன்ற 4 பேர் கும்பல்

திருச்சி அருகே காதலியுடன் வனப்பகுதிக்கு சென்ற காதலன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 18 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியுடன் வனப்பகுதிக்கு சென்ற காதலனை குத்திக் கொன்ற 4 பேர் கும்பல்
x
மண்ணச்சநல்லூர் அடுத்த திண்ணக்குளம் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன்,  நர்சிங் மாணவி ஒருவரை 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பொங்கல் தினத்தன்று இரு சக்கர வாகனத்தில் காதலியை அழைத்து கொண்டு குமுளூர் வனப்பகுதிக்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். காதல் ஜோடி இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் பார்த்துள்ளது. காதலனை மதுபாட்டிலால் தாக்கிய அந்த கும்பல், காதலியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், பலாத்காரம் செய்யப்படவில்லை என்று, காவல்துறை கூறினாலும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக,  பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். லால்குடி டி.எஸ்.பி ராஜசேகரன் தலைமையிலான 3 தனிப்படை குழு இது குறித்து விசாரித்து வருகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் 18 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை கொன்று காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மாநகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்