புதுச்சேரி : ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி : ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். பாரதி வீதியில் இயங்கி வரும், ஸ்கேன் மையத்தில், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து, வருமானவரித் துறை உதவி ஆணையர் குமார்  தலைமையிலான 13 பேர் கொண்ட குழு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வரவேற்பு அறை, மருத்துவர்கள் அறைகளில் மற்றும் கணினிகளில் பதிந்துள்ள தகவல்கள் குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்