அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
x
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், காணும் பொங்கலை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகளும், 697 வீரர்களும், பங்கேற்றனர். காலை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் அடக்கினர். இதில் காளைகள் தாக்கியதில் 40 பேர் காயமடைந்தனர். இதனிடையே போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு நாளை முதலமைச்சர், துணை முதலமைச்சர் பரிசுகள் வழங்க உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்