தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி
தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்கோவில் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கூமாப்பட்டி போலீசார், அத்திக்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  தனியார் தோப்பு ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த மாரிமுத்து, பாண்டி, ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்