தலையில் கல்லை போட்டு அரசு பேருந்து நடத்துனர் கொடூர கொலை

சென்னை போரூரில், அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தலையில் கல்லை போட்டு அரசு பேருந்து நடத்துனர் கொடூர கொலை
x
போரூர், ஆற்காடு சாலை மதுபான கடை அருகே தலை நசுங்கிய நிலையில், ஒருவர் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அவரது உடலை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டதில், கொல்லப்பட்டவர், போரூர் சந்தோஷ்நகரை சேர்ந்த மதிவாண‌ன் என்பதும், அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. மது போதையில், ஏற்பட்ட மோதலில் இவர் கொல்லப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்