"மாசில்லா போகி பண்டிகை கொண்டாட நடவடிக்கை" - கருப்பணன், சுற்றுச்சூழல் அமைச்சர்

ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு குழு சார்பில் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், தமிழக வணிக வரி முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
x
ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு குழு சார்பில் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், தமிழக வணிக வரி முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில்  பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கருப்பணன் ,  பிளாஸ்டிக்   தடைக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிப்பதாக கூறினார். மேலும், போகி பண்டிகை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்யப்படும் என்றும், பகல் ,இரவு முழுவதும் கண்காணிக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்