லஞ்சம் வாங்கிய திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் வாங்கிய திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் கைது
x
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். திருக்கழுக்குன்றம், ராஜபாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு சென்றுள்ளார். அவரிடம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் பொன்பாண்டியன், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் தராததால் பாத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 ஆயிரம் ரூபாயை மூர்த்தியிடம் இருந்து சார்பதிவாளர் பெற்றபோது, அங்கு தயார் நிலையில் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. லவகுமார் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்குப் பின், சார்பதிவாளர் பொன்பாண்டியன் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்