முதலீட்டாளர்கள் மாநாடு - வழிமுறைகள் என்ன..?
உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
* வரும் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தனியார் நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
* 2015-ஆம் ஆண்டின் போது நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்கள், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மாநாட்டில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.
* மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story