குட்கா விவகாரம் குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம்

"வருமானவரித்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குட்கா விவகாரம் குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம்
x
குட்கா விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தாகவும் அவர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர் அனுப்பிய கடிதம் தலைமை செயலாளருக்கு சென்று அடைந்ததற்கான ஆவணங்களை சீலிட்ட கவரில்  தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை முதன்மை இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்