புத்தகங்கள் வாங்க குவியும் வாசகர்கள் கூட்டம்...

சென்னையில் நடைபெற்று புத்தக கண்காட்சியில் நாளுக்குள் நாள் வாசகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
x
நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 42-வது புத்தக திருவிழா, வாசகர்களின் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. வாசகர்களின் தேடலுக்கு ஏற்ப, வரலாறு, அரசியல், சமூக சிந்தனைகள், ஆன்மீகம், சித்தாந்தம் என பல வகையான புத்தகங்கள் கொட்டி கிடக்கின்றன. விருப்பமான புத்தகங்களை அள்ளிச் சென்ற வாசகர் ஒருவர், வீட்டிற்கு ஒரு நூலகம் அவசியம் என்கிறார். தனது மகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிய பாடலாசிரியர் விவேகா, ஆரம்ப காலத்தை விட பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கினால், தனிமனித வாழ்வு மேம்படும் என்பதே கண் உடைய கற்றோரின் கருத்தாகும்...

Next Story

மேலும் செய்திகள்