ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது

அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது
x
அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை என பல்வேறு குறைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில், அனைத்து தொழிற்சங்கம் சார்பில், தொழிலாளர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மற்றும், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்