கத்தி முனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் மர்மநபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தி முனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
x
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் மர்மநபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருப்பவர் தேவி. சின்னமலை பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவர், பணியை முடித்து விட்டு சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்,  வழிமறித்தனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை அவர்கள் பறித்து சென்றனர். அதன்பிறகு அவரை வேகமாக தள்ளிவிட்டதால் காயமடைந்த தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்