விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிகோட்டையை சேர்ந்த ரங்கநாத், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணை தலைவராக உள்ளார். கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வரும் அவர் கிருஷ்ணன் கோயில் அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் முன்பகுதியில் மர்மநபர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சைக்கிள் என 4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்