கிராமங்களே கோவில், தற்போது கோவிலுக்கு வந்ததை போல் உணர்கிறேன் - ஸ்டாலின்

திமுக சார்பில் "மக்களிடம் செல்வோம், மனங்களை வெல்வோம்"எனும் முழக்கத்துடன், கிராம சபை கூட்டத்தை திருவாரூரில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில் திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிதோறும் மக்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திருவாரூரில் கிராம சபை கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொடங்கி  வைத்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் அவல நிலைக்குக் காரணமான மக்கள் விரோத அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது என்றார். கருணாநிதி முதலமைச்சராக இருந்திருந்தால் புயல் பாதித்ததும் உடனடியாக வந்து மக்களை சந்தித்திருப்பார் என்றும் ஸ்டாலின்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்