சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 14,237 பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
x
பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையையொட்டி, 7 நாட்களுக்கு மேல் விடுமுறை இருப்பதால், சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில், 26 முன்பதிவு சிறப்பு கவுன்ட்டர்களை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தாம்பரத்தில் இரண்டு கவுன்ட்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா ஒரு கவுன்ட்டரும் திறக்கப்பட்டுள்ளன. பெண்கள், முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் முதல் வரும் 14ஆம் தேதி வரை, மொத்தம்14 ஆயிரத்து 237 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
       

Next Story

மேலும் செய்திகள்