போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பள்ளி மாணாக்கர்கள்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தம் பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் புதிய முறையை , மாவட்ட எஸ்.பி. அறிவுரை பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர், அறிமுகப்படுத்தி உள்ளார். இதன்படி, போக்குவரத்து காவலருடன் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தம் பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர். வாரம் தோறும் ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் உதவியுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி நடந்து வருகிறது இந்த நிலையில், முதன் முறையாக செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், மிகவும் நேர்த்தியாக அவர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story