திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது ஏன்...? - தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜனவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
x
ஜனவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 28-ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் எடுத்த அனைத்து நடவடிக்கையும் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் ரத்து தொடர்பான அறிவிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன்...? 


இடைத்தேர்தல் ரத்து : அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து 


Next Story

மேலும் செய்திகள்