தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு

இம்மாதம் முதல் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருகிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு
x
இம்மாதம் முதல் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

* இந்த மாதம் முதல், ஏழாயிரத்து 726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல, ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், கல்வி அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை செயல்படுத்தப்படவுள்ளதாகவும்,  அதற்காக, 15 ஆயிரத்து 452 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த புதிய முறையால், ஆசிரியர்கள் பள்ளிக்கு கால தாமதமாக வருவது தவிர்க்கப்படும் என கல்வித்துறை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஸ்மார்ட் வருகைப் பதிவேடு முறை செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்