7-வது ஆண்டாக தொடரும் மருத்துவரின் சேவை - சேவைக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது

கோபிசெட்டிபாளையம் அருகே அப்பலோ மருத்துவர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் தொடங்கியது.
7-வது ஆண்டாக தொடரும் மருத்துவரின் சேவை - சேவைக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது
x
கோபிசெட்டிபாளையம் அருகே அப்பலோ மருத்துவர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் தொடங்கியது. அங்குள்ள கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மருத்துவர் கே.ஆர். பழனிசாமி, தற்போது சென்னை அப்பலோ மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராம மக்கள் பலனடையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில், 7-வது ஆண்டுக்கான மருத்துவ முகாம், கள்ளிப்பட்டி கிராமத்தில் தொடங்கியுள்ளது. முகாமில் பங்கேற்கும் மக்களுக்கு குடல் மற்றும் இரைப்பை நோய் தொடர்பாக உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. வயிறு, குடல், இரைப்பை நோய் வராமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவர் கே.ஆர்.பழனிசாமியின் சேவையை பாராட்டி, அவருக்கு மத்திய அரசு, ஏற்கனவே, பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமை படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்