திருமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி

மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள் புது கட்டடம் அமைத்து தரக் கோரிக்கை
x
கீழநேசநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 31 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதால், மேற்கூரை, பக்கவாட்டு சுவரில் உள்ள கான்கீரிட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. உயிருக்கு அஞ்சும் மாணவர்கள், மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகம் முறையிட்டும் பலனில்லை என தெரிவித்த கிராமமக்கள், கட்டடத்தை உடனடியாக புதுப்பித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்