பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1,000 : முதலமைச்சருக்கு அமைச்சர்கள் நன்றி

பொங்கல் பண்டிகையை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1,000 : முதலமைச்சருக்கு அமைச்சர்கள் நன்றி
x
பொங்கல் பண்டிகையை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். சட்டப்பேரவையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது , அரசின் இந்த அறிவிப்பு சரித்திர சாதனை என கூறினார். இதே போல் அமைச்சர் தங்கமணி பேசும் போது, ஒரு சாமானியனின் ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக,  இந்த அறிவிப்பு  உள்ளதாகவும், அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்