பிரபல உணவகங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பல முக்கிய உணவகங்கள், உணவகங்கள் சார்ந்த அலுவலகங்கள், இயக்குனர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 32 இடங்களில், 120க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, கிளைகளில் உள்ள ரசீதுக்கும், வருமானவரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பல முக்கியமான ஆவணங்களை அப்போது அவர்கள் கைப்பற்றப்பற்றியதாக கூறப்படுகிறது. அதே இடங்களில் 2வது நாளாக இன்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story