சோதனைச்சாவடி அருகே கிடந்த மர்ம பையில் ரூ1 கோடி மதிப்புள்ள தங்கம்

பொறையாறு சோதனைச்சாவடி அருகே கிடந்த மர்ம பையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனைச்சாவடி அருகே கிடந்த மர்ம பையில் ரூ1 கோடி  மதிப்புள்ள தங்கம்
x
பொறையாறு சோதனைச்சாவடி அருகே கிடந்த மர்ம பையில்  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் பொறையாறில் அமைந்துள்ள சோதனைச்சாவடி அருகே மர்ம பை ஒன்று கிடந்துள்ளது. அதனை கைப்பற்றிய சோதனைச்சாவடி காவலர்கள் பொறையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை பிரித்து பார்த்த போது அதில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய 3 ஆயிரத்து 75  கிராம் எடையுள்ள 27 தங்க பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. அவ்வழியே வாகனத்தில் வந்த கடத்தல்காரர்கள் போலிசாருக்கு பயந்து தங்கத்தை தூக்கி  வீசியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்