மதுபோதையில் மகனை தொலைத்த தந்தை...

மதுபோதை​யில் தந்தை தொலைத்த மகனை ஒரே நாளில் கண்டுபிடித்து பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர், குமரபிரசாத். இவர் தனது 5-வயது மகன் குமரகுருவுடன் ஒரகடம் சென்று, மது வாங்கி குடித்துள்ளார். போதை தலைக்கேறியதால்,  அவர் சாலையிலேயே தூங்கிய அவர், போதை தெளிந்து பார்த்தபோது மகனை காணாததால், போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்த, சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீசார், மர்ம நபர் ஒருவர் குழந்தையை அழைத்து செல்வதை அறிந்து, 3 தனிப்படைகள் அமைத்து தேடினர். இந்நிலையில் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அனாதையாக நின்றிருந்த குமரகுருவை போலீசார் மீட்டு வந்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனந்த கண்ணீருடன் போலீசாருக்கு குமரபிரசாத் நன்றி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்