திருவாரூர் இடைத்தேர்தல் : 2 சுயே. வேட்பாளர்கள் மனு தாக்கல்

வருகிற 28 ம் தேதி நடைபெறும் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், துவங்கியுள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் : 2 சுயே. வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
வருகிற 28 ம் தேதி நடைபெறும் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், துவங்கியுள்ளது. முதல் நாளான நேற்று, மேட்டூர் பத்மநாபன் என்ற சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். இவர், இதுவரை, 199 முறை, தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு, சாதனை படைத்தவர். இதேபோல, தர்மபுரி அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் என்ற மற்றொரு சுயேட்சை வேட்பாளரும், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வருகிற 10 - ம் தேதி வரை, வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. திமுக - அதிமுக ஆகிய கட்சிகளை பொறுத்தவரை, இன்று  வேட்பாளர் பெயர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்