நந்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

கும்பகோணத்தில் உள்ள 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நந்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
x
கும்பகோணத்தில் உள்ள  2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, அங்குள்ள நந்திக்கு மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களாலும், 108 லிட்டர் பால் ஊற்றியும் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. நந்திக்கு அபிஷேகம் நடந்த அதே நேரத்தில் சுவாமி ஆதிகும்பேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இந்த விழாவில் ஸ்பெயின் நாட்டவர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்