புத்தாண்டு தினம் : விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு

புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து
புத்தாண்டு தினம் : விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு
x
புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து, வேலை வாய்ப்புக்கு தேவையான காவல்துறையின் நன்னடத்தை சான்று மறுப்பு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 10 ஆயிரம் கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், புத்தாண்டு தினத்தன்று அச்சுறுத்தும்படி பயணித்தோர், 3 பேராக பயணித்தோர், அதிக சத்தத்துடன் வாகனத்தில் பயணித்தோர், அதிவேக பயணம் செய்தோர் என 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்