வாடிவாசலுக்கு வர்ணம் பூசும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஜல்லிகட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் வர்ணம் பூசும் பணி தொடங்கியுள்ளது.
வாடிவாசலுக்கு வர்ணம் பூசும் பணி தொடக்கம்
x
பொங்கல் பண்டிகையை ஒட்டி,  மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அரசாணை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் காளைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலமேடு வாடிவாசல் அருகே தமிழக அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் செலவில்  தொடங்கிய பார்வையாளர்கள் மாடம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதேபோல், வாடிவாசல் பகுதியில் வர்ணம் பூசும் பணி தொடங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்