திருமணமான ஒரு மாதத்தில் கணவன் தற்கொலை...

நெல்லை மாவட்டத்தில் காதல் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான ஒரு மாதத்தில் கணவன் தற்கொலை...
x
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டு காலனியை சேர்ந்தவர் சாந்த நேசகுமார். சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சாந்த நேசகுமார், அந்த பகுதியில் வசித்து வந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திவ்யாவை அழைத்து வந்த சாந்த நேசகுமார் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில், திவ்யா சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சாந்த நேசகுமார், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்